அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண்ணொருவர் நேற்றிரவு (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் கஹட்டகஸ்திகிலிய-மீமின்னாவல ,இஹலகம பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுத்தாகே விமலாவத்தி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் வீட்டு வாசலுக்கு முன்னால் நின்ற யானை அப்பெண்ணை தூக்கி வீசியதாகவும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment