களுத்துறை – ஹொரண பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்தவர் என்பதுடன் அவரது மனைவி ஹொரண வைத்தியசாலையில் தாதியாக சேவையாற்றி வருபவர்.
அதன் காரணமாக அந்த வைத்தியசாலையின் 05 நோயாளர் அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment