அக்/மன்பஉல் ஹைராத் அரபுக் கல்லூரியில், 14 மாணவிகள் பல்கலைக்கு தேர்வு

இர்ஷா ஜமால்-

டந்த வருடம் (2019) நடைபெற்று முடிந்த கா.பொ.(உ/த) பரீட்ச்சைக்கு அக்கரைப்பற்று, மன்பஉல் ஹைராத் பெண்கள் அரபுக் கல்லாரியின் நான்காம் தொகுதி மாணவிகள் 24கு பேர் தோன்றி இருந்தனர்.

வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் கல்லூரியின், பரீட்சை சித்தி வீதமானது100%ஆகும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 14 மாணவிகள் தமது உயர் கல்வியை இலங்கை பல்கலைக் கழகத்தில் தொடர்வதற்கு தேர்வாகி உள்ளனர்.

கலைப் பிரிவிற்கு ஏழு மாணவிகளும், இஸ்லாமிய நாகரீக கற்கை நெறிகளுக்கு நான்கு மாணவிகளும், அரபு மொழித் துறைக்கு மூன்று மாணவிகளுமாக மொத்தம் 14கு மாணவிகள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியுள்ளனர்.

மாணவிகளது இம்மகத்தான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சக மாணவிகள், மாணவிகளினதும், கல்லூரியினதும் வளர்ச்சிக்கும், முன் னேற்றத்திற்கும் அயராது தங்களை அர்ப்பணம் செய்து கொண்டிருக்கும் கல்லூரியின் ஆளுநர் சபையினர், மற்றும் கல்லூரியின் நலனில் அக்கறை செலுத்தும் நல்லுள்ளம் கொண்ட எல்லோருக்கும் தனது நன்றியை தெரிவித்தார், கல்லூரியின் அதிபர் அஷ் ஷைஹ் இர்ஷாத் (இஸ்லாஹி) அவர்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :