உலக சமாதான தினத்தினை முன்னிட்டு திருகோணமலை சேவிங் ஹியுமெனிட்டி பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலையில் சகவாழ்வு பாத யாத்திரையொன்று இன்று(21) இடம்பெற்றது.
பன்மைத்துவம் மற்றும் நீதியின் ஆட்சி ஆகியவற்றை பலப்படுத்துவதன் மூலம் சமய சகவாழ்வை கட்டியெழுப்புதன் எனும் தொனிப்பொருளில் இவ்பாத யாத்திரை நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பௌத்த,இந்து,இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத்தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
திருகோணமலை மணிக்கூட்டு கோபுர வளைவிலிருந்து ஆரம்பமான இப்சர்வ மத பாதயாத்திரை திருகோணமலை நகர சபை மண்டபத்தினை சென்றடைந்தது.
இதன்போது சகவாழ்வின் முக்கியத்துவம்,பன்மைத்துவமான நீதியின் ஆட்சி போன்ற தலைப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment