பேஸ்புக்கில் செய்திகள் பகிரும் வசதி முடக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பேஸ்புக்கில் செய்திகள் பகிரும் வசதி முடக்கப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை டிஜிட்டல் தொழிநுட்பத்தில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால் அதற்குரிய கட்டணத்தை ஊடக நிறுவனங்களுக்கு செலுத்த வழி வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர அவுஸ்திரேலிய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.
இதன் மூலம், கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் $6 Billion ( சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபா ) விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக எச்சரித்திருக்கிறது.
கொரோனா வைரஸால் விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானம் ஈட்டி வருகின்றன.
இதற்கு கடிவாளம் இடும் வகையிலேயே அவுஸ்திரேலிய அரசாங்கம் புதிய சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. முன்னதாக டிஜிட்டல் தொழிநுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் போன்ற தளங்கள், செய்திகளுக்காக தனியான கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவுக்கு, கூகுள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக்கில் செய்திகள் பகிரும் வசதி முடக்கப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :