புலிகள் இயக்கத்திற்கு நாட்டை எழுதிவைத்த ரணில்-மஹிந்தாநந்த அழுத்கமகே


க்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்தபோது,

“கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவித திருத்தமும் செய்யப்பட மாட்டாது. எமது அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தைப் போன்றதல்ல. இந்த நாட்டை நேசிக்கிற பிரதமரும், ஜனாதிபதியும் ஆட்சியிலிருக்கின்றனர். 

ரணில் விக்கிரமசிங்கவைப் போல இந்த நாட்டை வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எழுதிவைக்கவில்லை. 2001ஆம் ஆண்டில் நீங்கள் எழுதிக்கொடுத்திருந்தீர்கள். ஆனால் 2015ற்குப் பின் எமது படையினருக்கு எதிராக போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு சென்றீர்கள். படையினருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானங்களுக்கு இணங்கியிருந்தீர்கள்” என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :