
எப்.முபாரக்-
கிண்ணியா கண்டலடியூற்று பிரதேசத்தில் இரானுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 18 குடும்பங்களுக்குச் சொந்தமான தனியார் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (4)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாவட்ட இரானுவக் கட்டளைத் தளபதி (GOC) மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியதையடுத்து கட்டைபரிச்சான் முகாமுக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா நேரடியாக சம்மந்தப்பட்ட காணிக்கு விஜயம் செய்து பார்வையிட்டு அக்காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment