கல்முனை பிரதேச செயலகத்தில் சமூர்த்தி செளபாக்கிய செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வும், சமூர்த்தி அதிர்ஸ்ட இலாப சீட்டிலுப்பின்
கீழ் வெற்றி பெற்றவர்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வும் மற்றும் கல்முனை பிரதேச செயலக பிரிவின் கீழ் சமூர்த்தி உதவி பெறும்
6520 பயனாளிகளுக்கான சமூர்த்தி நலன்னோம்பல் உறுதிப் பத்திரம் வழக்கும் நிகழ்வினையும் ஆரம்பித்து வைத்தல் என மூன்று நிகழ்வுகள் இன்று(22) கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலிஹ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சமூர்த்தி செளபாக்கிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 07 பயனாளிகளுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாவும்,சமூர்த்தி லொத்தர் சீட்டிலுப்பின் கீழ் 07 பயனாளிகளுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும் வழக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர்,மற்றும் கணக்காளர் வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி மகா சங்க முகாமையாளர் எம்.எஸ் ரிபாயா,கருத்திட்ட முகாமையாளர் எம்.நயீமா,கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம்.புவிராஜ், சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத் உட்பட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment