எண்ணெய்க் கப்பல் தொடர்பாக சட்ட மா அதிபர் விடுத்த பணிப்புரை!



M.I.இர்ஷாத்-
ப்பல் தீப்பற்றிய கடல் பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரியை பகுப்பாய்விற்கு அனுப்புமாறு, கடல்சார் சூழல்பாதுகாப்பு அதிகார சபைக்கு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.
MT New Diamond எண்ணெய்க் கப்பலின் அருகில் பெறப்பட்ட குறித்த மாதிரியை, அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பல் காணப்படும் இடத்தில், எண்ணெய்ப் படிவுகளை அவதானிக்க முடிந்துள்ளதாகவும், இரண்டு கடல்மைல் தொலைவுக்கு குறித்த எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதாகவும் இலங்கைக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் நேற்றைய தினம் டீசல் படிவுகளை அவதானிக்க முடிந்ததாகவும், கடல் பிரதேசத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், இரசாயனங்களை தூவ நடவடிக்கை எடுத்ததாகவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :