அரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கார்பெட் வீதிகள் நிர்மாணிக்கும் செயற்றிட்டத்தின் கீழ் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சோதி நகர் நான்காம் கட்டைப் பகுதியில்இருபத்தாறு (26 Mn) மில்லியன் ரூபா செலவில் சுமார் ஒரு (1Km) கிலோமீற்றர் நீளமான கார்பெட் வீதி அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (04) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் திரு. அன்டன் டபரேரா உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment