தோட்ட அதிகாரியை வெளியேற்றகோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தலவாக்கலை பி.கேதீஸ்-


லவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி 5.9.2020 சனிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருகையில் ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்ற கோரியே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 4.9.2020 வெள்ளிக்கிழமையன்று அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை அத்தோட்ட அதிகாரி தாக்க முற்பட்டதாக அத்தொழிலாளி அதிகாரி மீது குற்றம் சுமத்தியுள்ளார். 

இதனை தொடர்ந்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 500 ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். குறித்த அதிகாரி அத்தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக பல கெடுபிடிகளை செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர். அத்தோட்ட அதிகாரிக்கு எதிராக 5.9.2020 சனிக்கிழமை காலை அணிதிரண்ட அத்தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலைக்கு அருகாமையில் பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் 4.9.2020 வெள்ளிக்கிழமை பறிக்கப்பட்ட 7000 கிலோ தேயிலை கொழுந்து அரைக்கப்படாமல் சேதமடைந்துள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :