ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு நேற்று (11) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 181 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுக்கு உள்ளாகி 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment