J.f.காமிலா பேகம்-
20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை குறித்து பேச வேண்டாம் என்று அரச உயர்மட்டத்தினால் சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கடிவாளம் இடப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
அதன் காரணமாகவே நாடாளுமன்றத்திலும், ஊடகங்கள் முன்பாகவும் வெகுவாக புதிய உறுப்பினர்கள் மாத்திரமே இந்த திருத்த யோசனைக் குறித்து பேசிவருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை சுதந்திரக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார நிராகரித்த போதிலும், முன்வரிசையிலிருந்த அரச தரப்பு சிரேஸ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவிப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment