20 பற்றி பேசவேண்டாம்-சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு கோட்டா கடிவாளம்?


J.f.காமிலா பேகம்-


20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை குறித்து பேச வேண்டாம் என்று அரச உயர்மட்டத்தினால் சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கடிவாளம் இடப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

அதன் காரணமாகவே நாடாளுமன்றத்திலும், ஊடகங்கள் முன்பாகவும் வெகுவாக புதிய உறுப்பினர்கள் மாத்திரமே இந்த திருத்த யோசனைக் குறித்து பேசிவருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை சுதந்திரக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார நிராகரித்த போதிலும், முன்வரிசையிலிருந்த அரச தரப்பு சிரேஸ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவிப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :