2020 ஆம் ஆண்டிற்கான சப்ரிகம சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு


 பாறுக் ஷிஹான்-

2020 ஆம் ஆண்டிற்கான சப்ரிகம சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

இன்று(11) முற்பகல் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி    பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் சப்ரிகம அபிவிருத்தி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திய கிராமிய அபிவிருத்தி சங்கம் ,மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், ஆகியவற்றை பாராட்டி நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.ஐ.எம் முஸ்தபாவும் விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ நாஹிப்பும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா , நாவிதன்வெளி  பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன்,நாவிதன்வெளி பிரதேச செயலக   கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்  , கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்  , மேலதிக மாவட்ட பதிவாளர்  பி.நித்தியானந்தன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி.ஜெயகாந்தன் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.லோகிதராஜ் ,உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்   என பலர் கலந்து கொண்டனர் . 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :