எதிர்வரும் 12 ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் இரத்ததான முகாம்..


எச்.எம்.எம்.பர்ஸான்-


ம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமியா - கல்குடாவின் சமூக சேவைப் பிரிவான தஃவா சமூக நலன்புரிச் சங்கம் (DSWA ) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த நிறுவனம் வருடாந்தம் நடாத்தி வரும் 07வது இரத்ததான முகாம் எதிர்வரும் 2020.09.12ம் திகதி சனிக்கிழமை காலை 09 மணி முதல் 01 மணி வரை மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

உயிர் காக்கும் இவ் உண்ணத தர்மத்தில் பங்கு கொண்டு மனித நேய, சமூக நல்லிணக்கப் பணியின் பங்காளிகளாக அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :