இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலைகளில்



க.கிஷாந்தன்-
ருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும், மஸ்கெலியா - சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் 07.09.2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழாம் இலக்க தேயிலை மழையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீதே மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு தாக்கியுள்ளது.
06 பெண்களும் 02 ஆண்களுமாக 08 பேர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ள நிலையில் நால்வர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் நால்வர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்,

இதேவேளை, மஸ்கெலியா - சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் குளவி கொட்டுக்கு இழக்காகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன், மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :