திருகோணமலை நகரில் 1070 மில்லி கிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் நடமாடிய இருவர் விளக்கமறியலில்



எப்.முபாரக்-
திருகோணமலை நகரில் 1070 மில்லி கிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(6) உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் ஐந்தாம்,கட்டை சீனக்குடா மற்றும் ஆண்டாம்குளம் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 20 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் 1070 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒருவரிடமிருந்து 540 மில்லிகிராம் ஹேரொயினும்,மற்ற சந்தேக நபரிடமிருந்து 530 ஹேரொயின் போதைப் பொருளுடனும் கைது செய்துள்ளதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ( வாசஸ்தலத்தில்) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :