கந்தளாய் பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் ஆரம்பம்


எப்.முபாரக்-
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று(10)ஆரம்பமாகின.
பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 4ஆம் திகதி முதல் முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொதுத் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்த வகையில்  திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து சுகாதார நடை முறைகளை பேணி பாடசாலை வருகை தந்ததோடு,மாணவர்கள் கைகளை சுத்தம் செய்து வெப்பமாணி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு பாடசாலையினுள் சென்றதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :