வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த ரவூப் ஹக்கீம்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு; 83,398 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ரவூப் ஹக்கீம், தமக்கு முதலிடத்தைப் பெறுவற்கு உதவிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், குருநாகல், வன்னி, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியினூடாக போட்டியிட்ட தமது கட்சி சார்பான வேட்பாளர்களை ஆதரித்தவர்களுக்கும் அவர் தமது நன்றிகள் உரித்தாகட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :