காலநிலை எச்சரிக்கை..!

ஜே.எப்.காமிலா பேகம்-

ப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணத்தின் பல இடங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் 18 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

வட, வட மத்திய, மேல், தென் மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும், மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :