ரணில் அடம்பிடிப்பாரா? விட்டுக்கொடுப்பாரா? சிறிகொத்தவில் தீர்மானம் இன்று!

ஜே.எப்.காமிலா பேகம்-


பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கட்சி எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பில் தீர்மானம் எடுக்க ஐக்கிய தேசிய கட்சி இன்று திங்கட்கிழமை கூடுகிறது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் இன்று முற்பகல் சிறிகொத்தவில் இடம்பெறும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகுவாரா? தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லப்போவது யார்? போன்ற பிரச்சினைகளுக்கு இன்று பெரும்பாலும் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், முன்னாள் எம்.பிக்களான ருவன் விஜேவர்தன, வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :