நடந்த தேர்தலில் மோசடியா? !


J.f.காமிலா பேகம்-
ண்மையில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என்கிற சர்ச்சைக் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகிய ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
பொதுத் தேர்தல் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“தனது மாமனாராகிய விஜய குமாரதுங்க தேர்தலில் போட்டியிட்டபோது வாக்கெண்ணும் பணியினிடையே மூன்றுமுறை மின்வெட்டு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அவருடைய வாக்குகள் திட்டமிட்ட சூழ்ச்சியின்படி குறைத்துக் காட்டப்பட்டன. இறுதியில் தோல்வி ஏற்பட்டது.
அதேபோல இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி அமரர் வில்லியம் கொபல்லாவவின் வாக்கினையும் கள்ளவாக்கு என்றபடி எவரோ பதிவிட்ட சம்பவமும் அரங்கேறியிருந்தது. இதனைப்போலவே நமது நாட்டில் தேர்தல் என்பது நீதியானமாக நடக்காது. அப்படி நீதியாக நடந்தால் அது பிரச்சினைக்குரியதாகிவிடும்.
கடந்த தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துவந்த அட்மிரல் சரத் வீரசேகர இம்முறை கொழும்பில் முதலிடத்தை வகித்துவந்த விமல் வீரவன்சவை வீழ்த்தி முதலிடத்தை எப்படி பெற்றார்? இதேபோல கம்பஹா மாவட்டத்திலும் முதலிடம் பிடிக்கும் பிரசன்ன ரணதுங்கவை வீழ்த்தி நாலக்க கொடஹேவா எப்படி முதலிடத்தைப் பெற்றார்? மாத்தறை, அம்பாந்தோட்டையிலும் இப்படியே நிகழ்ந்துள்ளது. இது சந்தேகத்திற்குரிய விடயமாகும்” – என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :