ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தாக்கல்!

ஜே.எப்.காமிலா பேகம்-

பாதுகாப்பு அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தம்வசம் வைத்திருக்கவேண்டும் என உத்தரவிடக் கோரி, அடிப்படை உரிமை மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அருண லக்சிறி என்பவரால் குறித்த மனு  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 9, 30 மற்றும் 105 (4) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில், இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், புத்தசாசன அமைச்சை வேறொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு, ஜனாதிபதியால் வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தற்போது பாதுகாப்பு அமைச்சை மாத்திரம் தம்வசம் வைத்துக்கொண்டு, புத்தசாசன அமைச்சுப் பதவிளை வகிக்காதிருப்பதன் மூலம், அரசியலமைப்பின் 9, 10 மற்றும் 12 (1) ஆகிய பிரிவுகள் மீறப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :