காரைதீவு மாவடிக்கந்தன் இம்முறை சமுத்திரத்தில் தீர்த்தமாடமாட்டார்!


காரைதீவு  சகா-

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா திருவிழாவின் இறுதிநாளான இன்று(4)செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவம் வழமைபோன்று இம்முறை சமுத்திரத்தில் இடம்பெறாது என ஆலயரிபாலனசபைத்தலைவர் கே.ஆறுமுகம் செயலாளர் எஸ்.சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஆலயபரிபாலனசபை எடுத்ததீர்மானத்திற்கமைவாக இம்முறை காவடியுடனான ஜனரஞ்சகமான தேருர்வலம் வெளிவீதி வலம்வருதல் அன்னதானம் என்பன முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் தீர்த்தோற்சவம் இம்முறை சமுத்திரத்தில் ஆடுவதில்லை எனவும் மாறாக ஆலய கிணற்றில் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த இவ்ஆடிவேல்விழா இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :