மரங்களை வெட்டும் போது உரிய நடைமுறைகளை பிரதேச செயலகம் பின்பற்றவில்லை


பாறுக் ஷிஹான்-
ரங்களை வெட்டும் போது உரிய நடைமுறைகளை பிரதேச செயலகம் பின்பற்றவில்லை எனவும் அதனால் தான் சிறு முரண்பாடு ஏற்பட்டது என கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வருக்கு எதிராக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட போராட்டம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு வெள்ளிக்கிழமை(14) மாலை மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும் தனது கருத்தில்

எமது வளாகத்தில் இருந்த 3 பாரிய மரங்கள் எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வெட்டி அகற்றப்பட்டிருந்தன.இது சம்பந்தமாக எவ்வித கருத்தையும் சொல்ல நான் விரும்ப வில்லை.ஒரு விடயத்தை மாத்திரம் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.எமது மாநகர வளாகத்தில் தான் கல்முனை பிரதேச செயலகமும் அமைந்துள்ளது.அங்கு நின்ற 3 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.இம்மரங்கள் 25 வருடங்கள் பழைமை வாய்ந்தமையாகும்.ஆனால் இம்மரங்களை வெட்டி அகற்றும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றி இருக்கவில்லை.அதனால் தான் சிறு முரண்பாடு ஏற்பட்டது.அதனை பேசி தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :