பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பெறவிரும்பாத வரப்பிரசாதங்கள்!


நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சலுகைகள் - வரப்பிரசாதங்கள்

சம்பளம்

01) நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் - ரூபா 54285/=
02) பிரதி அமைச்சர் - ரூபா 63500/=
03) இராஜாங்க / அமைச்சரவை அமைச்சர் - ரூபா 65000/=
04) சபாநாயகரின் சம்பளம் - ரூபா 68500/=
05) பிரதமர் - ரூபா 71500/=

சம்பளத்திற்கு மேலதிகமாக
* அலுவலக கொடுப்பனவு - ரூபா 100000/= (ஒரு இலட்சம்)
* போக்குவரத்து கொடுப்பனவு - ரூபா 10000/=
* தொலைபேசி கொடுப்பனவு - ரூபா 50000/= (அலுவலகம்)
* மொபைல் தொலைபேசி கொடுப்பனவு - ரூபா 50000/=
* இலவச அஞ்சல் கொடுப்பனவு ரூபா 350,000/= (மூன்றரை இலட்சம்)
* டிரைவர் மற்றும் விருந்தோம்பல் கொடுப்பனவு ரூபா 45000/=
* பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூபா 2500/= , ஒரு மாதத்தில் குறைந்தது 8 நாட்களுக்கு அமர்வு நடைபெறுகிறது, அதன்படி மாதத்திற்கு ரூபா 20000/= பெறப்படுகிறது.
* கூட்டமில்லாத நாட்களில் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு ரூபா 2500/= (மாதாந்தம் 5 குழு நாட்கள் , அதன்படி மாதாந்தம் ரூபா 12,500/=)
* ஒருங்கிணைப்பு செயலாளருக்கு 218 லிட்டர் எரிபொருளுக்கு ரூபா 17440/=
* இராஜாங்க/ அமைச்சரவை அமைச்சு ஊழியர்களுக்கு 05 

வாகனங்கள்
* பிரதி அமைச்சு ஊழியர்களுக்கு 03 வாகனங்கள்.
* குறிப்பாக, ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் தனியார் செயலாளர் பதவிகளுக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர் நியமிப்பது அனுமதிக்கப்படுகிறது. அந்த பதவிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கொடுப்பனவு என்பன மேலதிகமாக வழங்கப்படுகின்றன
* கூடுதலாக, சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு கட்டணமில்லா உரிமங்கள் கிடைக்கின்றன. ரூபா 30-40 லட்சத்திற்கு வாங்கிய வாகனங்களை ரூபா 25 மில்லியனுக்கு விற்கலாம்.
* பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்படும்போது ரூபா 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் காப்பீட்டுத் தொகை ரூபா 20 லட்சம்.
* கூடுதலாக, ஒரு ஆடம்பர உத்தியோகபூர்வ வீடு
* காலை உணவு மற்றும் மதிய விஷேட உணவிற்கு பாராளுமன்றம் ரூபா 150/= மாத்திரமே அறவிடுகிறது.
* ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது.
* கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளில் குழந்தைகளுக்கு 

அனுமதி
* V.I.P வெளிநாட்டு பயணம், உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் பயணத்திற்கான சிறப்பு விஷேட சலுகைகள்
இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பேரும் பொதுமக்களின் வரிப் பணத்தால் 05 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறார்கள்
(தகவல் - லங்காதீப
தமிழில் - முஹம்மது றினாஸ்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :