ஏறாவூர் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியை சந்தை வியாபாரிகளின் அழைப்பின் பேரில் இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ” எனது மாகாண சபை முதலமைச்சர் பதவிக் காலத்தில் முறைப்படியாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை மாகாண சபை கலைக்கப்பட்டதின் பின்னர் பிரதேச அரசியல்வாதி ஒருவரே வேண்டுமென்று தடைப்படுத்தினார்.
அதன் காரணமாகவே இந்த அரசியல்வாதியை இம்முறை மக்கள் நாடாளுமன்றப்படி ஏறவிடாமல் தடுத்துள்ளார்கள். அந்த வகையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட அத்தனை அபிவிருத்தித் திட்டங்களும் எல்லா சமூக மக்களுக்கும் நன்மை கிட்டும் வண்ணம் தங்குதடையின்றி முன்னெடுக்கப்படும்.
ஏறாவூர் நவீன சந்தை சட்டப்படியான எல்லா நடைமுறைமைகளையும் பின்பற்றி மாகாண சபை மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அனுமதியோடும் 193 மில்லியன் ரூபாய் நிதியோடும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் கட்டுமான வேலைகள் தொடக்கி வைக்கப்பட்டன.
ஆயினும் பிரதேச அரசயில்வாதி தனது வங்குறோத்து கையாலாகத்தன அரசியலைப் பயன்படுத்தி நாடாளுமன்ற கோப் குழுவுக்கு பொய்யான தகவல்களைச் சொல்லி இந்தப் பிரதேசத்தின் ஒட்டு மொத்த அபிவிருத்திகளையும் கேள்விக்குட்படுத்தினார்.
எனினும் அந்த அரசியில்வாதியின் பொய் கூற்றுக்கள் நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டது ஒரு புறமிருக்க அந்த பொய் அரசியல்வாதியை இப்பொழுது மக்களும் நிராகரித்து விட்டனர்.
அதன் பெறுபேறாக இப்பிரதேச அபிவிருத்திகள் தங்கு தடையின்றி இனித் தொடரும்.
தொழினுட்ப வளாகம், கிழக்குமாகாண மக்களுக்கான நவீன வைத்தியசாலை, கைத்தொழில் பேட்டைகள், நவீன சர்வதேச ஆடைத் தொழிற்சாலைகள் என்பன அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படும். அதன்மூலம் பல ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் நிபுணத்துவ தொழில் வாய்ப்பைப் பெறுவர்” என்றார்.
0 comments :
Post a Comment