மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றதை முன்னிட்டு அக்கரைப்பற்று நகரில் மகிழ்ச்சி வெற்றி கொண்டாட்டம்


எம்.என்.எம்.அப்ராஸ்-

நாடாளுமன்ற பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
அமோக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி பிரமாணம் செய்ததையடுத்து அக்கரைப்பற்று நகரில் மகிழ்ச்சி கொண்டாட்டம் இன்று(09) இடம்பெற்றது அம்பாறை மாவட்ட அனைத்து கட்சிகள் ஒன்றியத்தின் தலைவர் எம் .எம் .நிஸாம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஆதரவாளர்களால் பானங்கள் பேரீத்தம் பழங்கள் என்பன வீதியினால் பயணித்த பயணிகள் ,பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அம்பாரை மாவட்ட அமைப்பாளர்கள் , திகாமட்டுல்ல மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ அவர்களின் பிரதிநிதியாக டினுசன் மற்றும் ஆலோசகரான அமினுதீன் ,பொதுமக்கள் இவ் மகிழ்ச்சி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் .
அத்துடன் அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பதவியேற்ப்பை முன்னிட்டு வீதிகளில் பால்சோறு, பானம் என்பன வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :