வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை லேகியங்களை வைத்திருந்தவர் கைது

எப்.முபாரக்-


திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பத்து போதை லேகியங்களை வைத்திருந்த ஒருவரை நேற்று(28) மாலை கைது செய்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜயந்திபுர,வான்எல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வான்எல பகுதியில் போதைதரக்கூடிய பத்து லேகியங்களை மற்றொருவருக்கு வழங்குவதற்காக வீதியில் நின்ற சமயத்தில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பத்து போதை லேகியங்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நிதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :