கிழக்கு மாகாணத்தில் கடமை புரியும் ஆசிரியர்கள் ஒய்வூதியம் உடனடி நடவடிக்கை..!

எம்.ஏ.முகமட்-

கிழக்கு மாகாணத்தில் கடமை புரியும் ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சின் கீழான திணைக்களத் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலர் உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப் படாமையினால் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அவர்களது சுயவிபரக் கோவையிலுள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என்பதை இதன்போது செயலாளர் சுட்டிக் காட்டினார்.

எனவே, அடுத்த வரும் 5 வருடங்களுக்குள் ஓய்வு பெறவுள்ள சகல ஆசிரியர்களினதும் சுயவிபரக்கோவைகளை ஒழுங்கு படுத்துமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -