திருகோணமலை லொறி விபத்தில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி திருமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி




எம்.ஏ.முகமட்-

திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில், இன்று (03) காலை லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக லொறி பயணித்துக்கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -