ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி


எச்.எம்.எம்.பர்ஸான்-
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து திருகோணமலை நோக்கி முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றில் நான்கு பேர் பயணித்ததில் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் அதனை செலுத்திச் சென்ற நபரே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த நபர் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எச்.எம்.இர்பான் வயது (34) என்பவர் என பொலிஸாரின் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இவருடன் பயணித்த ஒருவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கான வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -