களனி பல்கலைகழகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
களனி பல்கலைகழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 24 திகதி அன்று அடையாளம் தெரியாத சிலரினால் சேதமாக்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, 22, 23 மற்றும் 25 வயதுகளை உடைய 9 மாணவர்கள் கிரிபத்கொட பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் மஹர நீதவான் நீதி மன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்கள் ஒன்பது பேரும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை மஹர நீதவான் நீதி மன்ற நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை கிரிபத்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்