கல்முனை கல்வி வலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய என்.அப்துல் மஜீத் (ஜுனைதீன்)ஆசிரியர் தனது 32 வருடகால கல்விச்சேவையில் இருந்து கடந்த (15 /6/2020) ஆம் திகதி முதல் ஓய்வு பெற்றுள்ளார்.
கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியினையும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்கல்வியினையும்
கற்ற இவர், பின்னர் கல்முனை அல் -அஷ்ஹர் வித்தியாலயத்தில் 4 வருடங்களாக தொண்டர் ஆசிரியராக கடமையாற்றிய நிலையில் 1988 இல் இடம்பெற்ற ஆசிரியர் போட்டி பரிட்சையில் சித்தியடைந்த இவர், தனது முதல் நியமனத்தின் மூலம் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் சுமார் இரண்டரை (2 1/2 )வருடங்கள் பணி புரிந்துள்ளார்.
பின்னர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் 2 வருடங்கள் ஆசிரியர் பயிற்சியை முடித்த இவர், பின்னர் கல்முனை அல்-ஸுஹரா வித்தியாலத்திலும்,4 வருடங்களாக ஆசிரியராக கடமை புரிந்த நிலையில் ஆசிரியர் சேவை இடமாற்றத்தின் போது கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் 12 வருடங்கள் ஆசிரியராகவும் , பின்னர் கல்முனை அல் -பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 10 வருடங்கள் ஆசிரியராகவும் கடமையாற்றிய நிலையில் மீண்டும் கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் 2 வருடங்கள் கடமையாற்றிய நிலையில் தனது 32 வருட கால ஆசிரியர் சேவையிலிருந்து தனது 58 வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
மேலும் இவர் கிராம மட்டத்தில் பல்வேறு சமய, சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
