திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேர் விளக்கமறியலில்


எப்.முபாரக்-
திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(15) உத்தரவிட்டார்.
கிண்ணியா ரகுமானிய்யா நகர் மற்றும் மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 24 வயதுடைய இருவரும்,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவருமாக மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கிண்ணியாவில் இருவரும் தலா ஐம்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம் உடைமையில் வைத்திருந்த நிலையிலும்,திருகோணமலையில் சந்தேக நபரே 210 மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையிலும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை அந்தந்த பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -