யு.என்.டி.பியால் கொரோனா 19 தொற்று நோய் சுகாதார பாதுகாப்பிற்காக 10,000 சேர்ஜிக்கள் முக அங்கிகள் மாஸ் 30 காய்ச்சல் வெப்பமாணிகளும்


அஸ்ரப் ஏ சமத்-
க்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் கொரோனா 19 தொற்று நோய் சுகாதார பாதுகாப்பிற்காக 10,000 சேர்ஜிக்கள் முக அங்கிகள் மாஸ் 30 காய்ச்சல் வெப்பமாணிகளும் அனா்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டன. இப் பொருட்களை ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (யு.என்.டி.பி) இலங்கைக்கான வதிவிடப் பிரதிப் பணிப்பாளா் ஜனாபா பாயிஸா எபண்டி, இலங்கையின் அனா்த்த முகமைத்துவ நிலையத்தின் பணிப்பாளா் நாயகம் மேஜா் ஜெனரல் சுதந்த ரணசிங்கவிடம் கையளித்தாா்.
அனா்த்த முகாமைத்துவ பணிப்பாளா் தகவல் தருகையில் - இலங்கையில் அவ்வப்போது முகம் கொடுக்கும் அனா்த்தங்களுக்கு யு.என்.டி.பி தொடா்ந்து உதவிவருகின்றது. கடந்த 2017 ல் தென்மேல் அதிக பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ள அநா்த்தின்போது 879,000 மக்கள் பாதிக்கப்பட்டனா்.80,000 வீடுகள் சேதமடைந்தன.342,000 மக்கள் தமது அன்றாட வாழ்வதாரத்தினை இழந்தனா். எதிா்காலத்தில் இலங்கையில் பெய்ய உள்ள பருவமழையின்போது இத் தொகையை விட பாதிப்புக்கள் அதிகரிக்கலாம். அத்துடன் மலையகப்பகுதிகளில் கூடுதலான பிரதேசங்களில் மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

இந் நிலையில் இலங்கை வாழ் மக்கள் புதிதாக கொரோணா வைரஸ் தாக்கத்திற்கு உலக சுகாதார ஸ்தாபணம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு திணைக்களம் அமுல்படுத்தும் சட்ட திட்டங்களுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்படும் கண்டிப்பான உத்தரவுகளுக்கும் வீடுகளில் தங்கி நீண்டகாலம் இருப்பதற்கும் நமது சாதாரண வாழ்க்கையில் இருந்து சற்று விலகி இருப்பதற்கும் பழகிக் கொண்டுள்ளாா்கள். அத்துடன் இதற்காக 24 மணித்தியாலங்கள் கடமையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் உத்தரவுகளுக்கும் நாம் அடிபணிந்து நமது இந்த நாட்டினையும் இங்கு வாழும் மக்களும் இவ் கொடிய நோயில் இருந்தும் மரணத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வோம். இந் நோய்த் தொற்றில் அடு்ததவரையும் பாதுகாப்பதற்கும் நாம் பழக்கிக் கொள்ளல் வேண்டும்.
இலங்கையில் உள்ள ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் தி்ட்டம் இலங்கையில் ஏற்படும் ஒவ்வொரு அனா்த்திற்கும் எமது திணைக்களம், சுகாதாரம், கல்வி, இலங்கையில் உள்ள அரச சாா்பற்ர நிறுவனம், உலக செஞ்சிலுவைச் சங்கங்கள் ஊடாக இவ்வாறு பல உதவி திட்டங்களை உதவி வருகின்றமையிட்டு இலங்கை அரசின் சாா்பாக இலங்கை வதவிடப் பிரதிப் பணிப்பாளா் பாயிஸாவுக்கும் மற்றும் அ்திகாரிகளுக்கும் அவா் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -