வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் இருபத்தொரு வயது இன்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் குறித்த இளைஞன் ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிரதேசத்தில் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒன்பது போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
ஊரடங்கு காலவேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்கும் வகையிலும் குற்றவாளிகளை கைதுசெய்யும் வகையிலும் பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்