ஹட்டன் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் லிபர்டி கட்டிடத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (24.05.2020) 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளினை கழுவிவிட்டு வீட்டுக்குமுன்னால் உள்ள வீதியில் அங்கும் இங்கும் செலுத்தி பார்த்துள்ளார்.குறித்த இளைஞன் ஒருசில்லில் மோட்டார் சைக்கிளினை செலுத்துவதனை அருகில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.

குறித்த இளைஞன் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் அருகிலிருந்த கட்டிடத்தில் மோதி பின்னர் போய் படலையை உடைத்துக்கொண்டு விழுந்ததாகவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டனில் கணனி திருத்தவேலை மற்றும் கணனி வியாபார உரிமையாளருமான பிரகாஷ் புத்திக நிரோசன வயது 30 என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -