தொடரும் நிவாரணப் பணி



னநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான வேலுகுமாரின் வழிகாட்டலுடன் கண்டி மாவட்டத்தில் 40 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.

தொடர் ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமது கட்சியின் அமைப்பாளர்கள் ஊடாக பலவழிகளிலும் உதவிகளை வழங்கிவரும் வேலுகுமார் இன்றைய தினமும் சில பகுதிகளுக்கு நேரில் பயணம் மேற்கொண்டு நிவாரணப் பணிகளை கண்காணித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் இன, மத, மொழி, கட்சி பேதங்களுக்கு அப்பால் மனிநேயத்துடன் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவரும் வேலுகுமார் தலைமையிலான குழுவினருக்கு மதத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும்வரை நிவாரணப் பணி தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -