கோவிட்- 19 சமூக பாதுகாப்பு நலனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவு சம்மாந்துறையில் வழங்கி வைப்பு


ஐ.எல்.எம் நாஸிம்-
னாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 சமூர்த்தி வங்கிகளூடாக 16937 பயனாளிகளுக்காக 87.67 மில்லியன் ரூபா நிதியை சமூர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேல் முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (18) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நேரில் சென்று குறித்த வேலைத் திட்டத்தினை அமுல்படுத்தினர்.

இதன்போது சம்மாந்துறையின் உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், தலைமைபீட முகாமையாளர் யூ.எல்.எம். சலீம், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம். அம்சார், சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -