அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலத்தில் வரலாற்றுச் சாதனை புரிந்த மாணவியை கெளரவித்த CEO அமைப்பினர்


அ.அய்ஷ்மா தானியா-
ட்டாளைச்சேனை அக் அந் நூர் மகா வித்தியாலத்தின் வரலாற்றுச் சாதனை படைத்த நாசர் பாத்திமா சப்றா என்னும் மாணவியை வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்வு ஒன்றினை இன்று  “CEO ADDALAICHENAI” எனும் அமைப்பினர் மேற்கொண்டனர்.

கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இன்று 2020-04-27 இன்று வெளியான கா.பொ.சாதாரண தர பரீட்சையில் பெற்றுள்ளது மாத்திரமல்லாமல் அட்டாளைச்சேனை கோணாவத்தை கிராமத்தின் வரலாற்றில் சாதனை படைத்து (9A) பெறுபேற்றினை பெற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவியை பெறுபேறு கிடைத்து சில மணி நேரத்தில் இவ்வமைப்பினர் இந்த கெளரவத்தை வழங்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் அமைப்பின் இணைப்பாளர், திட்டமிடல் இணைப்பாளர், அமைப்பின் தலைவர், செயலாளர், பொருலாளர் என அனைவரும் கலந்து கொண்டு சாதனை நாயகியை வீடு தேடி சென்று வாழ்த்தி கெளரவித்து அவருக்கு பெறுமதியான பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

அதுமாத்திரமல்லாது கல்விக்கு கரம் கொடுக்கும் நோக்குடன் இவ்வமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக  சித்தியெய்திய அனைத்து மாணவர்களையும் கெளரவித்து பரிசில்களும் வழங்கவும் தயாராக உள்ளதாக அமைப்பின் நிருவாகத்தினர் தெரிவித்துள்லமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -