டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் முகமாக கிணறுகளில் மீன் விடுதல் நிகழ்வு கட்டம் கட்டமாக நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் செவ்வாய்க்கிழமை(21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயற்திட்டம் நிந்தவூர்-5 கிராம சேவகர் பிரிவில் ஆரம்பமானது.
இதற்கான நடவடிக்கைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணனின் அறிவுறுத்தலுக்கமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர் ஆலோசனையுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுளள்ளன
நிந்தவூர் 16ம் பிரிவில் டெங்கு நோயாளி ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) அடையாளம் காணப்பட்டதற்கிணங்க மேற்குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் டெங்கு நோய் தடுப்பு புகை விசிறியடிக்கப்படுகின்றது.