வாகன விபத்தில் ஒருவர் பலி, மற்றையவர் படுகாயம்..


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காயான்கேணி புல்லாவி சந்தியின் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இறாலோடையில் இருந்து வாகரை நோக்கி பயணமாக மோட்டார் சைக்கிள் புல்லாவி சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின்கம்பத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் பக்கமாக இருந்து வந்த இறாலோடை காயான்கேணியை சேர்ந்த தியாகராஜா கனுஜன் (வயது 18) என்பவர் மரணமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த இறாலோடை காயான்கேணியை சேர்ந்த செல்வந்திரன் கேதுஜன்; (வயது 19) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -