UNPயின் குருணாகல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் S.P நாவின்ன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளார்.
UNPயில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தியால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் UNPயை சேர்ந்த பல பாரளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை வழங்க பொதுஜன பெரமுன கட்சி இணங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் UNPயில் குருணாகல மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த பின் October 26யில் நடைபெற்ற அரசியல் புரட்சியில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து பின்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் UNPயின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து S.P நாவின்ன செயற்பட்டு வந்தார்.