ரிஷாட் – மேர்வின் சில்வாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு !


முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சதோச நிறுவனத்தின் ஆவணங்கள் பலவற்றை மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் கைக்கு கிடைகக் செய்தமை, மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் 7 ஆயிரத்து 340 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தான விசாரணைகளுக்காக ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபணத்துக்குள் அத்துமீறியமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடிக்கு முற்பகல் 10 மணிக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. மேர்வின் சில்வாவுக்கு இந்த அறிவித்தலை அனுப்பியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -