பொது ஜன ஐக்கிய முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் வேட்புமனு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்,க.கிஷாந்தன்-

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன ஐக்கிய முன்னணி தாமரை மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்ப்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் பூரணப்படுத்ததப்படுத்தப்பட்டுள்ள நிலையில் (17) திகதி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறு
முகம் தொண்டமானின் தலைமையில் இந்த வேட்ப்பு மனு தாக்கல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த வேட்பு மனுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மருதபாண்டி ரமேஸ்வரன்,பழனி சத்திவேல்,பிலிப்குமார்,கணபதி கணகராஜ், ஆகிய 05 பேரும் பொது ஜன பெரமுண மொட்டு சின்னத்தில் சி.பி. ரத்நாயக்க,எஸ்.பி.திசாநாயக்க,நிமல் பியதிஸ்ஸ,பெரியசாமி பிரதீபன்,எஸ் .சதாசிவம்,முத்தையா பிரபாகரன் 07 பேர் இந்த வேட்புமனு பட்டியலில் அடங்குகின்றன.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட சீ.பி.ரத்நாயக்கா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேட்ப்பு மனுவை மாவட்ட செயலாளரும் , நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.பி.எம். புஸ்பகுமாரவிடம் கையளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஸ்ரீPPலங்கா பொது ஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட தேர்தல் நடவடிக்கைகள் தலைவராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான் இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீPPலங்கா பொது ஜன பெரமுன ஆகியன இணைந்து போட்டியிடுவதாகவும் இதில் நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றியினை பெறுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சிபி.ரத்நாயக்க.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -