தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கல்வி மற்றும் புறகிருத்திய செயற்பாடுகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பாரட்டி கௌரவிப்பு.



 ஞாயிற்றுக்கிழமை(26) மாலை சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலய மண்டபத்தில் மாலை 5மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் வின்னர் விளையாட்டுகழக தலைவருமாகிய கே.செல்வராஜா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டி நினைவுசின்னம் வழங்கிவைக்கப்பட்டதோடு மாணவர்களின் மேலதிக கல்வி வளர்ச்சிக்காக பண பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் ,கௌரவ அதிதியாக கல்முனை மாநகரசபை பொறியியலாளர் ரி.சர்வானந்தா,சிறப்பு அதிதியாக மு.நல்லதம்பி குருக்கள்,சேனைக்குடியிருப்பு மகா வித்தியாலய அதிபர் வி.சசீந்திரன்,ஓய்வு பெற்ற அதிபர் மு.சந்திரலிங்கம்,ஓய்வுபெற்ற தபால் அதிபர் இ.குருநாதன் வின்னர் விளையட்டுகழகத்தினர், மாணவர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -