தாருஸபாவில் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு !


நூருல் ஹுதா உமர்-

டந்த திங்கட்கிழமை (20) மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் துஆப்பிராத்தணையும் நேற்று (23) இரவு தாருஸபா அமையத்தின் தலைமையகத்தில் பிறை FM கட்டுப்பாட்டாளர் பஷீர அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது.

தாருஸபா அமையத்தின் தலைவர் மௌலவி ஷபா முகம்மத் அவர்களினால் துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்களினால் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிலோன் மீடியா போர தலைவர் றியாத் ஏ மஜீத், பொருளாளர் நூருல் ஹுதா உமர், உப தலைவர் எஸ்.அஸ்ரப் கான், எழுத்தாளர் முனை மருதவன் இப்ராஹிம், மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் புதல்வர் எம்.ஜே.எம். மின்ஹாஜ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் சகோதரர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -