திருகோணமலை மாவட்ட "சப்பிரிகமக்" பிரதான கூட்டம்" பிற்போடப்பட்டுள்ளது


ஹஸ்பர் ஏ ஹலீம்-
புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி தொடர்பில் திருகோணமலை மாவட்ட சமூக அடிப்படையிலான கிராம அபிவிருத்தி திட்டம் (சப்பிரிகமக்) கூட்டமானது வியாழக் கிழமை இன்று (09.01.2019) திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம் பெறவுள்ள நிலையில் தவிர்க்க முடியாததன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இக்கூட்டமானது எதிர் வரும் திங்கட் கிழமை (2020.01.13) ந்திகதி அன்று காலை 10.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (09)நாடாளுமன்ற அமர்வு காரணமாக இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது
இதில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலம மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் பிரமுகர்கள்,உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -