கர்நாடகாவில் 300 இஸ்லாமியர்களின் வீடுகள் தரை மட்டம்! .மக்கள் தெருவில்! பாஜக சாதனை!

எம்.எம்.நிலாம்டீன்- 

பாஜக ஐ.டி. விங்கின் போலி செய்தியை ஆதரமாக கொண்டு 300 இஸ்லாமியர்களின் வீடுகள் தரை மட்டம்: ஆவணங்கள் சோதனையில் இந்தியர்கள் என உறுதி!

சிஏஏ-வின் சட்டத்தின் அபாயத்தை உணர்த்தும் கர்நாடக பாஜக அரசின் நடவடிக்கை!

நாடு முழுவதும் மோடி அரசா
Add caption
ல் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் ஜனவரி 10 முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாஜக ஐ.டி. விங்கின் பிரச்சாரத்தை ஆதாரமாகக் கொண்டு, பெங்களூரில் 300 இஸ்லாமிய குடும்பங்களின் வீடுகள் பெங்களூர் காவல்துறையின் உதவியுடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள பெலந்தூர் ஏரி அருகே உள்ள வீடுகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. இவர்கள் எல்லோரும் வங்கதேசத்தை சேர்ந்தவர். இங்கே முறையின்றி குடியேறி இருக்கிறார்கள் என்று சங்கிகளால் தொடர்ந்து கூறப்பட்டது. இதனால் இவர்களின் வீடுகளை இடித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றியதாக பெங்களூர் போலீஸ் தரப்பு கூறுகிறது.

இந்த நிலையில் ஆவணங்களை பரிசோதனை செய்த அதிகாரிகள், அவர்கள் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர். தவறான தகவல் காரணமாக இப்படி நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வீடுகளை உடமைகளை இழந்த மக்கள் தற்போது இருப்பிடம் இன்றி அங்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரிடமும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருந்துள்ளது.

"நாங்கள் இந்தியர் என்பதற்காக சகல ஆதாரமும் இருக்கிறது. ஆனால் எங்கள் வீடுகளை இடித்துள்ளனர். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. நாங்கள் எல்லோரும் கர்நாடக மக்கள். எங்களுக்கு வங்கதேசம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. சில வடஇந்தியர்களும் இங்கே இருக்கிறார்கள். அதோடு, தமிழகத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் சிலரும் கூட இங்கே இருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய வீடுகளையும் இடித்து உள்ளனர்" என்கிறார்கள் வீட்டை இழந்த அப்பாவி மக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -